செஸ் ஒலிம்பியாட் தொடர் - முன்பதிவு செய்யாத சீனா


செஸ் ஒலிம்பியாட் தொடர் - முன்பதிவு செய்யாத சீனா
x

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தநிலையில், மாமல்லபுரத்தில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க சீனா இதுவரை முன்பதிவு செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளையுடன் முன்பதிவு முடியும் நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story