செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி


செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி
x

மகளிர் ஏ அணியின் தமிழக வீராங்கனை வைஷாலி ஜார்சியாவின் லெலா ஜவஹிஸ்விலியை வீழ்த்தினார்

சென்னை,

ஜூலை 28ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற 6வது சுற்று போட்டியில் ஆண்களுக்கான இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் ஆர்மீனியா வீரர் சர்கிஷியன் ஆகியோர் மோதினர். இதில் 41வது நகர்த்தலில் சார்கிஷியனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்றில் இந்திய மகளிர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றார். வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய வைஷாலி, ஜார்ஜியவின் ஜவகிஷ்விலி லேலாவை எதிர்கொண்டபோது 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜார்ஜியா அணியை இந்திய மகளிர் ஏ அணி 3:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது


Next Story