சிதம்பரத்தில் தையல்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


சிதம்பரத்தில் தையல்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x

சிதம்பரத்தில் தையல்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story