முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவு


முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவு
x
தினத்தந்தி 29 Aug 2022 1:50 PM GMT (Updated: 29 Aug 2022 1:58 PM GMT)

ஆன்லைன் ரம்மி தொடர்பாக இயற்றப்படும் அவசர சட்டம் நீதிமன்றம் சென்று தடை பெறமுடியாத அளவுக்கு இருக்கும் வகையில் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பதா அல்லது நேரடியாக மக்கள் பார்வைக்கு வெளியிடுவதா என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

அதேபோல் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story