காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 31 July 2022 8:23 AM GMT (Updated: 31 July 2022 8:25 AM GMT)

காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இதில் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, சங்கத் மகாதேவ் சர்க்கார் ,பிந்த்யாராணி தேவி, குருராஜ் பூஜாரி ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். பளுதூக்கும் வீரர்கள் தங்கள் அபார முயற்சியால் பதக்கப் பட்டியலில் இந்தியாவை தூக்கி நிறுத்தினர். காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story