தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு


தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
x

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகள் மழை காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுவதால் அங்கு மழைநீர் கால்வாய்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தாம்பரத்தில் சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.90 கோடி செலவில் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தாம்பரத்தில் நடைபெற்று வரும் நிரந்தர மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். மழை நீர் கால்வாய் அமைக்கப்பட உள்ள இடங்களை இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story