புனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


புனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 April 2023 7:00 PM GMT (Updated: 7 April 2023 7:01 PM GMT)
தர்மபுரி

புனித வெள்ளியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி அனுசரிப்பு

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தார். இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இயேசு சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி பாரதிபுரத்தில் அன்னசாகரம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் நேற்று புனித வெள்ளியையொட்டி இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். தொடர்ந்து பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. சியோன் ஆலயம்

தர்மபுரி சி.எஸ்.ஐ. சியோன் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாட்ஷா தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பமரத்து கொட்டாயில் உள்ள ஏ.ஜி. சர்ச்சில் பாதிரியார் சுந்தர் சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கோவிலூரில் உள்ள தேவாலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையிலும், செல்லியப்பட்டியில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், கடகத்தூரில் பங்குத்தந்தை சவுரியப்பன் தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை கென்னடி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பொம்மிடி

மேலும் பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், பி.பள்ளிப்பட்டியில் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை ஆரோக்கிய கென்னடி தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும் புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. அந்தந்த தேவாலயங்களில் இயேசுவை சிலுவையில் அறையும் தத்துரூப நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story