100 வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடக்கம்


100 வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடக்கம்
x

தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் 100 வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடங்கியது.

தர்மபுரி

உலக புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சர்க்கஸ் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கசை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். இந்த சர்க்கசில் ரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வல்லுனர்களால் பயிற்சி பெற்ற 100-க்கு மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 80 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் விளையாட்டு மற்றும் எந்த சர்க்கசிலும் இடம் பெறாத உலக புகழ் பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி சூட்டிங், மரண கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி, உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் அழகி தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் ஏதும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸிங் டிரியிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம், பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓட்டுதல், ஹேண்ட் பாரில் அமர்ந்து பின்னோக்கி சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காட்டப்படுகிறது. இதனை ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர்கள் வில்சன், நாசர் ஆகியோர் கூறுகையில், தர்மபுரியில் நடைபெறும் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ- மாணவிகள் வசதிக்காக சர்க்கஸ் வளாகத்தில் முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று கூறினர்.

1 More update

Next Story