நங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர், கூடுவாஞ்சேரிக்கு மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கம்


நங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர், கூடுவாஞ்சேரிக்கு மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கம்
x

நங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர், கூடுவாஞ்சேரிக்கு மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

சென்னை

நங்கநல்லூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் இந்து காலனி பஸ் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, திருவான்மியூர் வரை செல்லும் நிறுத்தப்பட்ட மாநகர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து மீண்டும் பஸ்களை இயக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து நங்கநல்லூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் எம் 18 என்), திருவான்மியூர் வரை செல்லும் மாநகர பஸ்(தடம் எண் எம் 1 ஏ) ஆகிய 2 பஸ்களையும் மீண்டும் இயக்கி வைக்கும் விழா நடந்தது.

விழாவுக்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர பஸ் போக்குவரத்து துறை மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாம், மாங்காடு நகர மன்ற துணை தலைவர் ஜபருல்லா, 167-வது வார்டு கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பஸ்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் மற்றும் நலசங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story