கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல்


கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல்
x

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கோவை,

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் தாக்கியதில் 4 சிறை வார்டன்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். தற்போது இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story