மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும்போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறலாம்


மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும்போட்டி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறலாம்
x
தினத்தந்தி 16 April 2023 7:00 PM GMT (Updated: 16 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதாரி நிலையிலான போட்டி தேர்வுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தில் அளிக்கப்பட உள்ள கட்டணமில்லா பயிற்சி மூலம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறலாம்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலி பணியிடங்கள்

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டபூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வை எழுத தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

கணினி அடிப்படையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணையவழியாக விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 3-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த வருகிற மே மாதம் 4-ந்தேதி கடைசி நாள் ஆகும். தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படஉள்ளது.

இந்த தேர்வுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் பாட குறிப்புகள், தமிழ்நாடு அரசின் கற்றல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story