தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு இடையன்காட்டுவலசு ஆண்டவர் வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 59). தேங்காய் வியாபாரி. இந்த நிலையில் நேற்று வெங்கடாச்சலம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி சரோஜா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாச்சலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





