தேங்காய்-பருப்புகள் ரூ.10½ லட்சத்துக்கு ஏலம்


தேங்காய்-பருப்புகள் ரூ.10½ லட்சத்துக்கு ஏலம்
x

தேங்காய்-பருப்புகள் ரூ.10½ லட்சத்துக்கு ஏலம் போனது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் நன்று வளர்ந்தவுடன் பறித்து முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடந்த ஏலத்தில் 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06-க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82-க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இதேபோல் 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.33- க்கும், சராசரி விலையாக ரூ.68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் பருப்புகள் மொத்தம் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story