ரூ.6 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.6 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த வாரம் 8 ஆயிரத்து 120 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.82.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.39-க்கும், சராசரியாக ரூ.78.42-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 516-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு ஏலம் போனது.


Next Story