ரூ.9¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.9¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.9¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தோறும் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் 6 ஆயிரத்து 520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.89-க்கும், சராசரியாக ரூ.84.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 533-க்கு ஏலம் போனது. இதேபோல் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 877 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.99-க்கும், சராசரியாக ரூ.82.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 666-க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் பருப்பு விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story