கோவை கார் வெடிப்பு: கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை...!


கோவை கார் வெடிப்பு: கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை...!
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது தல்கா உட்பட 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story