கோவை-மேட்டுப்பாளையம் ரெயில் 2 நாட்கள் ரத்து


கோவை-மேட்டுப்பாளையம் ரெயில் 2 நாட்கள் ரத்து
x

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை,

சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை ரெயில் நிலையம் அருகே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சொரணூர் - கோவை ரெயில் (எண் 06458) சொரணூர் - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். அந்த நாட்களில் போத்தனூர் - கோவை இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

இது போல், கோவை- சொரணூர் ரெயில் (எண் 06459) நாளை மறுநாள் மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் போத்தனூர் - சொரணூர் இடையே இயக்கப்படும்.

இதேபோல் நாளை மறுநாள் மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்க ளும் காலை 10.55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப் படும் மேட்டுப்பாளையம் - கோவை ரெயில் (எண் 06813) மற்றும் அதே நாள், கோவையில் இருந்து பகல் 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரெயில் (எண் 06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story