"எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும்" போலீஸ் தேடும் கோவை தமன்னா


எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும்  போலீஸ் தேடும் கோவை தமன்னா
x

கையில் பட்டாக்கத்தி, சிகரெட்டுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும்” போன்ற வன்முறையைத் தூண்டும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

சென்னை

கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடிகளிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ரவுடிகளை பட்டியலிடும் பணி நடந்தது. அதுபோன்று பிரகா சகோதரர்கள் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு பொம்மை துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்பது போன்ற வீடியோவை வெளியிட்டனர்.

இது தொடர்பாக போலீசார் ரவுடிகளை கண்காணித்து, 54 பேரை கைது செய்தனர். இதனால் தற்போது கோவையில் கஞ்சா விற்பனை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வீடியோ பதிவேற்றம் இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்கிற தமன்னா (வயது 23).

இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வருகிறார். அவர் பிரண்ட்ஸ் கால் மி தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்து உள்ளார். அதில் அவர், பயங்கர ஆயுதங்களுடன் நிற்பதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார்.

இன்ஸ்டாகிராமிலுள்ள அவரது கணக்கை 6,767 பேர் பின்தொடர்கின்றனர். கையில் பட்டாக்கத்தி, சிகரெட்டுடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும்" போன்ற வன்முறையைத் தூண்டும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பாக போலீசார் அவர்மீது வழக்கு பதிவுசெய்தனர். தலைமறைவாகவுள்ள அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்திருக்கின்றனர். பிரச்சனையானதும் அவர் அந்த வீடியோக்களை நீக்கிவிட்டார். அதே நேரத்தில் தமன்னா இப்போதுவரை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளைப் பதிவேற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story