ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ.61½ லட்சம் காணிக்கை வசூல்


ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ.61½ லட்சம் காணிக்கை வசூல்
x

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ.61½ லட்சம் காணிக்கை வசூலானது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு, உண்டியல்களில் காணிக்கைகள் செலுத்திவிட்டு செல்வார்கள். அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் உண்டியல்களை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.61 லட்சத்து 63 ஆயிரத்து 375 ரொக்கமும், 188 கிராம் தங்கமும், 3 கிலோ 121 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 134-ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story