தடை செய்யப்பட்ட கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை  கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x

தடை செய்யப்பட்ட கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை

சேலம்

சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீட்டின்படி பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது போலீசில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும். கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும்.

எனவே சேலம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்த்து நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story