வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி, மானியம் ஆடுர் ஊராட்சியில் உள்ள பள்ளியில் ரூ.31 லட்சத்து 42 ஆயிரத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி, வீரானந்தபுரம் ஊராட்சியில் அரசின் தொகுப்பு வீடு கட்டும் பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் சேகர், ஒன்றியக்குழு தலைவர் சகதியா பர்வீன் நிஜார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பிரசாத், உதவி பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மானியம்ஆடுர் ஜாபர் நாச்சியா மெகராஜ்தீன், வீரானந்தபுரம் முனு ஆதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story