நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குகாதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்குகாதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Sep 2023 7:00 PM GMT (Updated: 25 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

விடுதலை களம் கட்சியினர் மற்றும் சீர் மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தொட்டிய நாயக்கர், மறவர், குறவர் உள்ளிட்ட 68 சீர் பழங்குடியின சமூகங்களுக்கு டி.என்.டி. என்கிற ஒற்றை சான்றிதழ் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி காதில் பூ வைத்து கொண்டு மனு கொடுக்க வந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை களம் கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story