தூத்துக்குடியில் வரும் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு


தூத்துக்குடியில் வரும் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
x

தூத்துக்குடியில் வரும் 30ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி,

முத்துராமலிங்கர் குருபூஜை வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அந்நாளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுவை கொண்டு செல்லவும், பதுக்கலில் ஈடுபடவும் கூடாது என்றும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.


Next Story