வாணியம்பாடி பட்டு வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


வாணியம்பாடி பட்டு வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி பட்டு வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டு வளச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா வந்தார். அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் திட்டத்தின் கோப்புகள், பல்வேறு பதிவேடுகள் மற்றும் பட்டுக்கூடு அங்காடி, பட்டு முட்டை வித்தகம், பட்டு நூற்பகம் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது உதவி இயக்குனர் சென்னகேசவன் விடுமுறை என்று தெரிய வந்தது. முறையான அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளதன் காரணமாக பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சென்னகேசவனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வருவாய் துறை அலுவலர்கள், பட்டு வளர்ச்சித்துறை அலுவலக பணியாளர்கள் உள்பட உடனிருந்தனர்.


Next Story