கலவை அரசு மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி ஆய்வு

கலவை அரசு மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை
மருத்துவமனையில் நேற்று கலெக்டர் வளர்மதி ஆய்வுசெய்தார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். புதிதாக அமைந்துள்ள பல் மருத்துவ சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். முன்பை விட தற்போது நோயாளிகள் அதிக அளவில் வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவ அதிகாரி டாக்டர் வெண்ணிலாவை கலெக்டர் பாராட்டினார்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவு செய்வதை பார்வையிட்டார். கலவை தாசில்தார் இந்துமதி மற்றும் மருத்துவ அலுவலர் வெண்ணிலா, செவிலியர்கள் சந்தோஷ், திவ்யாஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






