கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் இந்து (18). ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் இந்து நேற்று முன்தினம் தலையில் தேய்ப்பதற்காக வைத்திருந்த மருந்தை (விஷத்தை) குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த இந்துவை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இந்து இறந்தார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



Next Story