கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பொன்னமராவதி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

தாய் கண்டித்ததால்...

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், தேனூர் ஊராட்சி, கருவப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கனிகா (வயது 19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் தொடர்ச்சியாக செல்போன் பயன்படுத்தி வந்ததால் கனிகாவை அவரது தாய் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் கனிகா இருந்து வந்தார்.

மாணவி தற்கொலை

இந்நிலையில் நேற்று கருவப்பூலாம்பட்டியில் உள்ள மிளகாய் தோட்டத்திற்கு சென்ற கனிகா அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அங்கு வந்த கனிகாவின் தாய், மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story