கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தண்டராம்பட்டை அடுத்த இராயண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சந்திரலேகா (வயது 19), திருவண்ணாமலையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வேலை செய்யாமல் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்ததால், அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபத்தில் சந்திரலேகா விஷத்தை குடித்து விட்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்திரலேகா இறந்து விட்டார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story