பாம்பு கடித்து கல்லூரி மாணவி சாவு

இலுப்பூர் அருகே பாம்பு கடித்து கல்லூரி மாணவி பலியானார்.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
பாம்பு கடித்தது
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே போலம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சின்னம்மாள் (வயது 19). இவர் இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னம்மாள் வீட்டிற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது சின்னம்மாளை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
மாணவி சாவு
இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சின்னம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






