கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்வாலிபருக்கு 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்வாலிபருக்கு 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்


விருத்தாசலம் அருகே மேல்பாப்பனப்பட்டு பழைய நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் முருகானந்தம் (வயது 23). தொழிலாளி. இவருக்கு 17 வயது கல்லூரி மாணவியுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முருகானந்தம் அந்த மாணவியிடம் அடிக்கடி பேசி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2.6.2020 அன்று முருகானந்தம் அந்த மாணவியிடம் பேசி, உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறி, அழைத்துள்ளார். அதற்கு அந்த மாணவி மறுத்துள்ளார். இதனால் முருகானந்தம் நீ வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, அந்த மாணவி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடை பகுதிக்கு வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அப்போது அங்கு அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரை முருகானந்தம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றவர், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவில்லை. இது பற்றி அந்த மாணவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

7 ஆண்டு சிறை

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் முருகானந்தம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அவரின் எதிர்காலம் கருதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரசின் ஏதாவது நிதியில் இருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story