கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டி கதிரையன்குளத்தை சேர்ந்தவர் ராஜா. அவருடைய மகள் பொற்செல்வி (வயது 19). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர்களது உறவினர் ஒருவர், இறந்து விட்டார். இதனால் அவரது வீட்டில் உள்ள அனைவரும் அங்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் கல்லூரிக்கு சென்று வந்த பொற்செல்வி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே துக்க வீட்டுக்கு சென்று விட்டு ராஜா குடும்பத்தினர், இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டுக்குள் பொற்செல்வி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பொற்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தீராத வயிற்றுவலி காரணமாக பொற்செல்வி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story