விழுப்புரத்தில்கல்லூரி மாணவி தற்கொலை


விழுப்புரத்தில்கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் மகள் சுமித்ரா (வயது 19). இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி சுமித்ரா, தனது வீட்டில் உள்ள இரும்புக்குழாயில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story