வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 3 பேர் காயம்


வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 3 பேர் காயம்
x
தினத்தந்தி 26 May 2023 7:52 PM GMT (Updated: 27 May 2023 7:40 AM GMT)

வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

துறையூர்:

பெரம்பலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒரு சரக்கு வாகனத்தில் காளை மாடுகளை ஏற்றிக்கொண்டு அஜித்(20), வர்ஷன்(7) ஆகியோர் துறையூருக்கு வந்தனர். துறையூர் அடிவாரம் அருகே வந்தபோது துறையூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி அசோக்குமார்(47) என்பவர் ஓட்டிச்சென்ற காரும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்டன. அப்போது பின்னால் மல்லிகா(67) என்பவர் வந்த இருசக்கர வாகனம் கார் மீது ேமாதியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட ஒரு காைள மாடு பரிதாபமாக செத்தது. இது பற்றி அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story