இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கமிட்டி கூட்டம் நடந்தது. திருமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இளைஞர் பெருமன்ற பிரசார இயக்கத்திற்கு வருகிற 23-ந் தேதி களக்காட்டில் வரவேற்பு கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து களக்காட்டில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்குகளால் நாசம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story