நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்ககோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்


நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்ககோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 6 Sep 2023 7:00 PM GMT (Updated: 6 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் யுவராணி தலைமையில் மண்டல செயலாளர் மருத்துவர் பாஸ்கர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜ் மற்றும் நிர்வாகிகள் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். அது சீமானை பின்பற்றும் கட்சியினரின் மனதை புண்படுத்துகிறது. மேலும் அவருக்கு தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமியும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். எனவே நடிகை விஜயலட்சுமி மற்றும் அரசியல் இயக்க நிர்வாகி வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story