புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரவேல், கீழக்கரை.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகர் பகுதியில் சிலர் ஆங்காங்கே தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமேசுவரம்.

கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நகர் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

செல்வா, பரமக்குடி.

நடவடிக்ைக எடுக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டு பயன்பாடின்றி உள்ளது. இதனால் ெரயில் பயணிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. அவசர தேவைகளை வாங்க இக்கடைகள் மிக அவசியம். எனவே ரெயில்வே நிர்வாகம் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

மாணவிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. இதனால் இப்பகுதயை சேர்ந்த மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அகமதுகான், திருப்பாலைக்குடி.


Next Story