கணினி அறிவியல் கருத்தரங்கம்


கணினி அறிவியல் கருத்தரங்கம்
x

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வள்ளிரதி பேசினார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பிச்சம்மாள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் செய்யது முகம்மது அலி, ஹஷீனத் ஜஸீலா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story