500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

ராசிபுரத்தில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 10 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். 500 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் சுகாதார அலுவலர் செல்வராஜ் ஆய்வாளர்கள் சிவா மற்றும் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story