மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே பரம்பூர் பெரிய கண்மாயில் மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் பரம்பூர் பெரிய கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாட்டு வண்டி உரிமையாளர் ஆலத்தூரை சேர்ந்த தங்கராஜ் (வயது 46) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story