லாரியில் கடத்த முயன்ற ரூ.9½ லட்சம் குட்கா பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற ரூ.9½ லட்சம் குட்கா பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து மத்திகிரி வழியாக சேலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.9.50 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்- இன்ஸ்பெக்டர் பூபதி ராமராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரட்சகநாதன் மற்றும் போலீசார் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி ஒரு லாரி வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

அப்போது அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 37) என்பது தெரியவந்தது. அவர் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 779 கிலோ குட்கா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story