இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் படுகாயம்


இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் படுகாயம்
x

இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன்கள் சாமிநாதன் (வயது 50), துரைமால் (48). இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் சாமிநாதன், அவரது மனைவி சித்ரா, மகன் மணிகண்டன் மற்றும் துரைமால், அவரது மனைவி தேவி, மகன் கவியரசன் ஆகியோர் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், துரைமால் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். பின்னர் துரைமால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story