சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதால் பரபரப்பு


சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதால் பரபரப்பு
x

இலுப்பூர் அருகே விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றியதில் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை

விசாரணைக்கு...

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஓலைமான்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை செய்வதற்காக நேற்று ஓலைமான்பட்டிக்கு புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ (வயது 52) மற்றும் போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ேபாலீசார் சென்றுள்ளனர். அப்போது திருச்சியை சேர்ந்த தங்கராஜ்(30) என்பவரை விசாரணைக்கு அழைத்தபோது சப்-இன்ஸ்பெக்டரை அவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் தங்கராஜை பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டர் காயம்

அப்போது தங்கராஜ் அருகில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த குழம்பை சட்டியுடன் எடுத்து போலீசார் மீது ஊற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் விலகினர். இதில் எதிர்பாராதவிதமாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவின் இடுப்பிற்கு கீழ் குழம்பு பட்டது. மேலும் போலீஸ்காரர் ராதாகிருஷ்ணனை தங்கராஜ் எட்டி உதைத்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story