காங்கிரசார் நூதன போராட்டம்
கயத்தாறில் காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் செய்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகிய இருவரும் கண்களில் துணி கட்டிக்கொண்டும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கயத்தாறு போலீசார் பேச்சவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story