காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் யாத்திரையை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர். மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் காமராஜர் மாளிகையில் தொடங்கிய பாதயாத்திரை பயணம் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கைகளில் காங்கிரஸ் கட்சிக்கொடியை ஏந்தி சென்றனர்.


Next Story