தெங்கம்புதூர் அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தெங்கம்புதூர் அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தெங்கம்புதூர் அருகேகட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,:

தெங்கம்புதூர் அருகே உள்ள வடக்கு அஞ்சுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அன்பரசன் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story