கருத்து கேட்பு கூட்டம்


கருத்து கேட்பு கூட்டம்
x

திருச்செந்தூரில் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அளவில் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கி, புதிய கல்வி கொள்கையின் நோக்கங்கள் குறித்த கருத்துக்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், திருச்செந்தூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


Next Story