தொடர்ந்து உயர்வு: தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா


தொடர்ந்து உயர்வு: தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story