தொடர் போராட்டம்: ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை


தொடர் போராட்டம்: ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை
x

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் இல்லத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story