பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த கட்டுப்பாட்டு அறை அமைப்பு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்


பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த கட்டுப்பாட்டு அறை அமைப்பு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
x

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் செய்ய 01.01.2019 முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எனவே, அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களும் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தத்தைக் கவனத்தில் கொண்டும் தமிழக அரசின் அரசானையினை கருத்தில் கொண்டும் அறிவிப்புக்கு இணங்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள், 2021ன், விதி 12-ன் படி, இவ்விதிகளை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இக்கட்டுப்பாட்டு அறை அனைத்து நாட்களிலும் வரும் 2022 ஜூலை 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும்.

இவ்வாறு அதில் கூ


Next Story