கடலூர் மாவட்டத்தில்மேலும் 3 பேருக்கு கொரோனா


கடலூர் மாவட்டத்தில்மேலும் 3 பேருக்கு கொரோனா
x

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்


கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 ஆயிரத்து 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 3 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இது வரை 75 ஆயிரத்து 142 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று ஒருவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று வரை கொரோனா பாதித்த 31 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story